நீர்கொழும்பு – ஏத்துக்கால கடற்பகுதியில் நீராடச் சென்ற இரு இளைஞர்களில் ஒருவர் காணாமற்போயுள்ளார். சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன இளைஞரை தேடும் பணியில் நீர்கொழும்பு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.