பாகிஸ்தானுக்கு கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் பாகிஸ்தானின் நிதி அமைச்சரும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் கைச்சாத்திட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு 3.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவியாக வழங்கப்படவுள்ளது. இதில் 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நடப்பு நிதி ஆண்டில் கிடைக்குமென பாகிஸ்தான் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இயக்குனர் வெர்னர் லெய்பாச், பாகிஸ்தானை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்க தேவையான அனைத்து உதவிகளையும் ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்க தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.