ஆர்ஜென்டினா மற்றும் உருகுவே நாடுகளில் இடம்பெற்ற திடீர் மின் தடை வழமைக்கு திரும்பியுள்ளது. மின் தடையினால் சுமார் 10 மில்லியனுக்கும் அதிகமானோர் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.
இதுதொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்படுமென ஆர்ஜென்டின ஜனாதிபதி மொரிஷியோ மெக்ரி தெரிவித்துள்ளார். மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் இயந்திர கோளாரே இதற்கு காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.