நைஜீரியாவில் கொள்ளையர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 35 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். நைஜீரியாவின் வடக்கு பகுதியிலுள்ள ஜம்பாரா மாநிலத்துக்குட்பட்ட டுங்கர் கபாவ் மற்றும் கிடான் வாவா ஆகிய கிராமங்களில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிள்களில் வருகை தந்த கொள்ளையர்கள் மக்கள் வைத்திருந்த பணம் மற்றும் உணவுப் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அத்துடன், 35 பொதுமக்களை கொலை செய்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.