சீனாவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 61 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காணமல்போயுள்ளனர். 40 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக சீன அனர்த்த முகாமைத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
9 ஆயிரத்து 300 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. தெற்கு மற்றும் மத்திய பகுதிகளுக்கே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்குண்டிருந்த 4 ஆயிரத்து 300 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அவசர உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக சீன செய்திகள் தெரிவிக்கின்றன.