அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டொக்டர் அநுருத்த பாதனியவுக்கு எதிரான வழக்கை புதிய நீதிபதி குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இவர் எதிர்பபு ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது தெரிவித்த கூற்றினால் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
தனிப்பட்ட காரணத்தினால் இவ்வழக்கில் இருந்து விலகி கொள்வதாக மேனமுறையீட்டு நீதிபதி ஜனக் டி சில்வா இதற்கு முன்னர் அறிவிததிருந்தார். இதற்கு அமைய எதிர்வரும் 21ம் திகதி மூவர் அடங்கிய நீதிபதி குழு முன்னிலையில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிஇன்று உத்தரவிட்டார்.