உலக கிண்ண கிரிக்கட் தொடரின் 19 வது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகள் சவுத்ஹெம்ப்டனில் மோதவுள்ளன. மேற்கிந்திய தீவுகள் அணி ஜேஷன் ஹோல்டர் தலைமையிலும் இங்கிலாந்து அணி இயன் மோர்கன் தலைமையிலும் களமிறங்கவுள்ளன.
உலக கிண்ணத் தொடரின் போட்டிகளுக்கு மழை காரணமாக தடை ஏற்பட்டுள்ள நிலையில் இன்றைய போட்டியும் நடைபெறுமா? என ரசிகர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். ஐரோப்ப கண்டத்தில் ஏற்பட்ட தீடீர் வானிலை மாற்றம் காரணமாக பல இடங்களிலும் மழை பெய்கிறது. இதனால் உலக கிண்ண கிரிக்கட் தொடரின் போட்டிகளுக்கும் தடை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை இதுவரை இடம்பெற்றுள்ள போட்டிகளின் அடிப்படையில் நியுசிலாந்து அணி 7 புள்ளிகளுடன் முதலாம் இடத்திலும் அவுஸ்திரேலிய அணி 6 புள்ளிகளுடன் 2 ம் இடத்திலும் இந்திய அணி 5 புள்ளிகளுடன் 3 ம் இடத்திலும் உள்ளன. 4 புள்ளிகளைப் பெற்றுள்ள இங்கிலாந்து அணி 4 ம் இடத்திலுள்ளது.