குருநாகல் பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. பன்னல பகுதியில் ஆடைத் தொழிற்சாலை அமைந்துள்ளது. அதன் களஞ்சிய அறையில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.
தீ தொழிற்சாலை கட்டிடம் , அலுவலகம், தையல் இயந்திர பகுதிகளுக்கும் பரவியுள்ளது. இதனால் சொத்துக்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன. நீர்கொழும்பு மற்றும் குருநாகலின் தீயணைப்பு படையினர் பிரதேச மக்களுடன் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். சம்பவத்தினால் சேதவிபரங்கள் இதுவரை மதிப்பிடப்படவில்லை. குருநாகல் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.