அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்த தகுதியானவர் இல்லையென ஈரானின் உச்ச அதிகாரம் படைத்த ஆன்மீக தலைவர் அயாத்துல்லா அலி காமேனி தெரிவித்துள்ளார்.
ஈரான் – அமெரிக்காவிற்கிடையிலான உறவு சீர்குலைந்து காணப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையில் போர் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. சமரசத்தை ஏற்படுத்த ஜப்பான் முயற்சிக்கிறது. இவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே 3 நாள் விஜயம் மேற்கொண்டு ஈரான் பயணமாகியுள்ளார்.
இதன்போது ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானியை ஜப்பான் பிரதமர் சந்தித்துள்ளார். அதன் பின்னர் இருவரும் ஈரானின் உச்ச அதிகாரம் படைத்த ஆன்மீக தலைவர் அயாத்துல்லா அலி காமேனியை சந்தித்துள்ளனர். இதன்போது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரும்புவதாக ஜப்பான் பிரதமர் ஈரான் ஆன்மீக தலைவரிடம் குறிப்பிட்டுள்ளார். இதனை ஏற்க மறுத்த அயாத்துல்லா அலி காமேனி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்த தகுதியற்றவர் என தெரிவித்துள்ளார்.