அரபுக்கடலில் ஏற்பட்டுள்ள வாயு புயல் குஜராத் மாநிலத்தை தாக்காதென இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குஜராத்தின் வேரவல் மற்றும் துவாரஹா ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் இப்புயல் கரையை கடக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு புயல் கரையை கடக்கும் போது 165 கிலோ மீட்டர் 180 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுமென இந்திய வளிமண்டலவியல் அதிகாரிகள் தெரிவித்தனர். குஜராத்தின் தாழ்நிலப்பகுதிகளிலுள்ள 3 இலட்சம் மக்கள் அப்பகுதியிலிருந்;து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதேவேளை நேற்று பிற்பகல் புதுடில்லி நகரை புழுதி புயல் தாக்கியது. இதனால் நகரம் முழுவதும் புழுதியால் மூடப்பட்டது.