பொசன் நோண்மதி தினத்தை முன்னிட்டு நேற்று முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை அரசாங்கம் பொசன் வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது. அனைத்து உயிரினங்களும் தண்டனைக்கு அச்சம் கொள்ளும் எனும் தொனிப்பொருளில் பொசன் வாரத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இதன் பிரகாரம் சகல மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் இன்று இரவு பிரித் ஓதும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நாளை மகா சங்கத்தினருக்கு அன்னதானம் வழங்கப்படும்.
பொசன் வாரத்தில் சகல நிறுவனங்கள் மற்றும் கட்டிடங்களில் பௌத்த கொடியை ஏற்றி வைக்குமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.இதேவேளை பொசன் வாரத்தையொட்டி ஆரம்பமான யாத்திரை நேற்று ஜயஸ்ரீமகாபோதியை வந்தடைந்தது. சங்கைக்குரிய ஸ்ரீனிவாச தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் பிரித் ஓதினர்.