வெளிநாடுகளிலுள்ள இலங்கை பிள்ளைகளுக்கும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளை தோற்றுவதற்கான வாய்ப்பை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான தூதரகத்துச் சென்று இதற்கான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளமுடியுமென கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் குறித்த பரீட்சைகளுக்கான சான்றிதழ்களை இணையத்தளம் ஊடகப் பெற்றுக்கொள்ளமுடியுமெனவும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.