இலங்கையில் இணையத்தள சைபர் தாக்குதலை எதிர்கொள்ளக் கூடிய வசதியுள்ளதாக டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
இதற்கென பிரத்தியேகமாக தொழிநுட்ப பதிலளிப்பு மத்திய நிலையமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதற்கமைய நாட்டின் தொழிநுட்பத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் அஜித் பி. பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.