சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் நாடுமுழுவதும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
1929 எனும் சிறுவர் உதவி துரித தொலைபேசி இலக்கத்திற்கு சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் வருடாந்தம் 9 ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகின்றன. இதுகுறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கிறது. இந்நிலையில் சிறுவர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுக்க தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.