உர பாவனை தொடர்பில் புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. பயிர்களுக்கு பயன்படுத்தப்படுகின்ற உரம் கருமி நாசினிகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு இதுதொடர்பான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்தார்.
மேலும் இவ்விடயங்கள் தொடர்பில் விவசாய ஆய்வு அதிகாரிகள் விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படுகின்ற தகவல்களை கருத்திற்கொண்டு அடுத்த கட்டமாக புதிய சட்டதிட்டங்களை அமுல்ப்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.