பொசொன் உற்சவத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ரயில்வே திணைக்களம், இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு, இலங்கை போக்குவரத்து சபை ஆகியன இணைந்து விசேட ரயில் மற்றும் பஸ் சேவைகளை முன்னெடுக்கின்றன.
கொழும்பிலிருந்து பிற மாகாணங்களுக்கு மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. மேலும் எதிர்வரும் வெள்ளக்கிழமை முதல் பொசொனை முன்னிட்டு விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை பொசொன் உற்சவத்தை முன்னிட்டு இதுவரை 200 தானசாலைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் 15ம் திகதி வரை தானசாலைகளை பதிவுசெய்ய முடியுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.