திருகோணமலை ரவுண்ட் தீவு பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு கடற்படை அதிகாரிகள் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இதன்போது டிங்கி படகொன்றும், தடைசெய்யப்பட்ட வலையொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதானவர்களை திருகோணமலை உதவி கடற்தொழில் பணிப்பாளர் காரியாலயத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.