அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவுக்கிடையில் இன்றையதினம் விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது.
பேச்சுவார்த்தைக்கு அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2019ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தப்பணிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அரசியல் கட்சி செயலாளர்களுடன் தேர்தல்கள் ஆணையாளர் கலந்துரையாடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.