இராவணா எல்ல நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்று 350 மீற்றர் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பயணித்த பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் நால்வர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் பண்டாரவளை மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து பயணித்தமையே விபத்துக்கு காரணமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.