இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட துருனுதிரிய கடன் திட்டம் தற்போது இளம் தொழில்முயற்சியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறறிருப்பதாக பிரதமர் செயலகத்தின் கொள்கை அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது.
துருனுதிரிய கடன் பெற்று வாழ்க்கையை வளமாக்கிய ஏராளமான இளம் தொழில் முயற்சியாளர்கள் தற்போது நாட்டில் உள்ளனர். நாட்டிலுள்ள அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்களை இணைத்து இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காக இக்கடன் திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.
பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொழில் சான்றிதழுடன் 3 வருடங்களுக்கு குறையாத வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் கடன் வழங்கப்படுகின்றது.
பிணையாளிகள் இன்றியோ அல்லது இலகுவான விதிமுறைகளில் குறைந்த வட்டியின் கீழ் இக்கடனை பெற்றுக் கொள்ள முடியும். இது தொடர்பான தகவல்களை இலங்கை வங்கியின் கிளைகள் மற்றும் பிரதேச செயலகங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.