மெக்சிக்கோ கௌதமாலா எல்லையில் மேலதிகமாக 6 ஆயிரம் பாதுகாப்பு படைவீரர்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. அமெரிக்காவிலிருந்து குடியேற்றவாசிகள் வருவதை தடுக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மெக்சிக்கோ பாதுகாப்பு பிரிவு தெரிவிக்கிறது.
அமெரிக்கா, மெக்சிக்கோ பொருட்களுக்கு மேலதிக வரியினை விதிக்க தீர்மானித்துள்ளது. குறித்த குடியேற்றவாசிகளின் பிரச்சினையை அடிப்படையாக கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வரி விதிப்பினை தடுப்பதற்கு மெக்சிக்கோ வெளிவிவகார அமைச்சர் கடும் பிரயத்தனங்களை முன்னெடுத்து வருகிறார். குடியேற்றவாசிகள் தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தர முடிவொன்று எட்டப்படாவிடின் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் மெக்சிக்கோ பொருட்களுக்கு 5 வீத மேலதிக வரி விதிக்கப்படுமென அமெரிக்கா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.