கொழும்பு கிழக்கு துறைமுகத்தின் இறங்குத்துறை தொடர்பான முழுமையான விபரம் நாளை பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இன்று சபையில் இந்த விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறை நூற்றுக்கு நூறு வீதம் இலங்கை அரசாங்கத்திற்கே சொந்தமானது என சுட்டிக்காட்டினார்.