சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 16 பேர் முல்லைத்தீவு அலம்பில் பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கிழக்கு கடற்டை பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி இவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.
அதற்கமைய குறித்த மீனவர்கள் பயணித்த 3 டிங்கிப் படகுகள், தடை செய்யப்பட்ட வலைகள் உள்ளிட்ட உபகரணங்களும் 384 கிலோகிராம் மீனும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டவர்களும், கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக முல்லைத்தீவு உதவி கடற்றொழில் பணிப்பாளர் காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.