மன்னார் பேசாலை பகுதி கடலில் வைத்து 140 கிலோகிராமிற்கும் அதிக எடைகொண்ட கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான ட்ரோலர் படகொன்றை படையினர் சோதனைக்குட்படுத்திய போதே அதிலிருந்து குறித்த கேரள கஞ்சா மீட்கப்பட்டது.
இவற்றை கொண்டுவந்த சந்தேக நபர்கள் தப்பிச் சென்றிருக்கலாமென கடற்படையினர் தெரிவிக்கின்றனர். இதனிடையே பளை தீவு கரையோரத்தின் நடமாடும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு பிரிவினர் 60 கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைகளை கைப்பற்றியுள்ளனர். இது குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.