டென்மார்க் பொதுத்தேர்தலில் அந்நாட்டு எதிர்க்கட்சி வெற்றிபெற்றுள்ளது. டென்மார்க் பிரதமர் லார்ஸ் லோக் ரஸ்முசென் தலைமையிலான லிபரல் கட்சி தோல்வியை ஒப்புக்கொண்டுள்ள நிலையில் ஜனநாயக கட்சி பெரும்பான்மை வாக்குகளை பெற்று தேர்தலில் வெற்றிபெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய ஜனநாயக கட்சியின் தலைவர் மெட் பெர்டெரிக்சன் விரைவில் ஆட்சிப்பொறுப்பை ஏற்கவுள்ளார். இதேவேளை நாட்டில் ஆரோக்கியமான தேர்தலொன்று இடம்பெற்றுள்ளதாக பிரதமர் லார்ஸ் லோக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை டென்மார்க் பாராளுமன்றத்தின் 179 ஆசனங்களில் 91 ஆசனங்களை ஜனநாயக கட்சி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.