இந்திய பிரதமர் நரேந்த்ர மோதி இரு அமைச்சரவை குழுக்களை நியமித்துள்ளார். பொருளாதார மீள் புனரமைப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை பிரச்சினைக்கு தீர்வுகாணல் ஆகிய விடயங்களுக்காக குறித்த அமைச்சரவை குழு நியமிக்கப்பட்டுள்ளது.
முதலீடுகளை அதிகரித்து புதிய தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். தலா 5 உறுப்பினர்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள குறித்த இரு குழுக்களினதும் தலைவராக இந்திய பிரதமர் நரேந்த்ர மோதி செயற்படவுள்ளார். இந்திய நிதியமைச்சர் உள்ளிட்டோர் குழுவில் உள்ளடங்குகின்றனர்.