உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கண்டறிவதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று காலை மீண்டும் கூடவுள்ளது. இன்றைய தினம் சாட்சி வழங்குவதற்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவுக்குழு உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
தெரிவுக்குழு இன்று 3வது தடவையாக கூடுகிறது. இதற்கு முன்னர் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு பொறுப்பான முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க சில்வா உள்ளிட்டோர் தெரிவுக்குழுவில் ஆஜராகி சாட்சி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.