வவுனியாவில் இரத்த கண்ணீர் சிந்தும் அம்மனை நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். வவுனியா சுந்தரபுரத்தில் உள்ள புதூர் நாகபூசனி மற்றும் நாகத்தம்பிரான் ஆலயத்தில் உள்ள அம்மன் சிலையின் கண்களில் இருந்தே இவ்வாறு இரத்தம் சிந்துகின்றது. ஆலய பூசகர் இன்று ஆலயத்திற்கு சென்ற போது அம்மனின் சிலையில் இருந்து சிவப்பு நிறத்தில் ஒருவகை திரவம் வடிவதை அவதானித்துள்ளது.
அதனை உடனடியாக அவர் துடைத்த போது, தொடர்ந்தும் கண்களில் இருந்து திரவம் வருவதை அவதானித்த அவர், பக்தர்களை அழைத்து சம்பவத்தை தெரிவித்துள்ளார். பக்தர்களும் அதனை துடைத்து பார்த்த போது, மீண்டும் மீண்டும் கண்களில் இருந்து இரத்தம் போன்ற திரவம் சிந்துவதை அவதானித்துள்ளனர். இதனை தொடர்ந்து அம்மனுக்கு விசேட பூஜைகள் இடம்பெற்றதுடன், சம்பவம் காட்டு தீயாக பரவ, நூற்றுக்கணக்கான அடியார்கள் அம்மனை தரிசிக்க வருகை தந்த வண்ணமுள்ளனர்.