நாட்டின் முதலாவது தொலைக்காட்சி சேவையான சுயாதீன தொலைக்காட்சி சேவை இன்று தனது 40வது பிறந்ததினத்தை கொண்டாடுகிறது. இதனை முன்னிட்டு விக்ரமசிங்கபுரயிலுள்ள பிரதான காரியாலயத்தில் இன்று இரவு விசேட பௌத்த மத அனுஷ்டானங்கள் இடம்பெறவுள்ளன.
இதேவேளை இன்று காலை சுயாதீன தொலைக்காட்சியில் 40 வருட பூர்த்தி விசேட நிகழ்ச்சியொன்று அரங்கேற்றப்பட்டது. இதில் சுயாதீன தொலைக்கட்சி ஊடக வலையமைப்பின் தலைவர் திலகா ஜயசுந்தர கலந்துகொண்டார். இங்கு கருத்து தெரிவித்த ஊடக வலையமைப்பின் தலைவர், ITN ஊழியர்கள் அனைவருக்கும் இது மிக விசேடமான ஒரு சந்தர்ப்பாகுமென குறிப்பிட்டார்.
இலங்கைக்கு முதல் தொலைக்காட்சி அனுபவத்தை ஏற்படுத்திக்கொடுத்த தொலைக்காட்சிகளின் தாய்வீடான சுயாதீன தொலைக்காட்சி இந்த வேளையில் ரசிகர் பெருமக்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக ஊடக வலையமைப்பின் தலைவர் திலகா ஜயசுந்தர குறிப்பிட்டார்.
முக்கியமாக இலங்கைக்கு தொலைக்காட்சி சேவையினை அறிமுகப்படுத்துவதற்கு மிக முக்கிய நபராக விளங்கிய சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் ஸ்தாபகர் ஷான் விக்ரமசிங்கவை இங்கு நினைவுபடுத்துவதாக ஊடக வலையமைப்பின் தலைவர் தெரிவித்தார்.
அதேபோல் அன்று முதல் இன்று வரை சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் வளர்ச்சிக்கு வித்திட்ட தலைவர்களுக்கும் ஊழியர்களுக்கும் அனைவருக்கும் தான் நன்றி மற்றும் கௌரவத்தை தெரிவித்துக்கொள்வதாக சுயாதீன ஊடக வலையமைப்பின் தலைவர் திலகா ஜயசுந்தர தெரிவித்தார். எப்போதும் சுயாதீன தொலைக்காட்சி இளமையுடன் இருக்க ஆதரவு வழங்கும் ரசிகர்களுக்கு தான் நன்றி தெரிவிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.