தேசிய சுற்றாடல் வாரத்திற்கு இணைவாக பல்வேறு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்றையதினம் அனுஷ்டிக்கப்படுகின்ற சர்வதேச சுற்றுச்சூழல் தினத்திற்கு இணைவாக குறித்த வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பாடசாலை பிள்ளைகள், அரச சேவையாளர்கள் மற்றும் பொதுமக்களை இலக்குவைத்து வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.