நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மேலும் பல வேலைத்திட்டங்கள் இன்று இடம்பெறுகின்றன. இம்முறை முல்லைத்தீவு மாவட்டத்தை மையப்படுத்தி நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
நேற்று ஆரம்பமான நான்காம் கட்ட வேலைத்திட்டம் எதிர்வரும் 8ம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவிக்கிறது. இன்றையதினத்தில் மாத்திரம் 335 வேலைத்திட்டங்களை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது விசேட பிரதிநிதி விஜயகாந்த் தெரிவித்தார். ஆறு பிரதேச செயலக பிரிவுகளை உள்ளடக்கி இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.