மனித படுகொலையுடன் தொடர்புடைய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 22ம் திகதி கொட்டாஞ்சேனை, புளுமென்டல் பகுதியில் 68 வயது நிரம்பிய வைத்தியர் ஒருவர் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
அத்துடன் அவரின் சொத்துக்களும் சூரையாடப்பட்டன. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தேடப்பட்டு வந்த நிலையில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கைதானவர்கள் கொட்டாஞ்சேனைப் பகுதியை வசிப்பிடமாக கொண்ட 16 முதல் 20 வயதிற்கிடைப்பட்டவர்கள் என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை சந்தேக நபர்கள் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களை 24 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைப்பதற்கான உத்தவை நீதிமன்றம் பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.