3950 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கிரான்பாஸ் ஜோசப் வீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே அவர் கைது செய்யப்பட்டார். கொழும்பு வடக்கு சட்ட அமுலாக்கல் பிரிவின் அதகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பேரில் இந்த சுற்றிவளைப்புக்கள் இடம்பெற்றதாக பொலிஸ ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கைது செய்ய்ப்பட்ட சந்தேகநபர்களை மாளிகாகந்த மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.