உலக கிண்ண கிரிக்கட் தொடரில் லண்டனில் நேற்று இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி விசேட வெற்றியை பதிவு செய்தது. தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக போட்டி இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 330 ஓட்டங்களை பெற்றது. 331 ஓட்டங்கள் என்ற வெற்றிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 309 ஓட்டங்கை மாத்திரமே பெற்று போட்டியில் தோல்வியடைந்தது.