பாடசாலை மாணவர்களில் 80 சதவீதமானோர் போஷாக்கு நிறைந்த உணவை உட்கொள்வதில்லை என கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் குறித்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் வைத்திய ஆய்வு நிறுவனத்தின் போஷாக்கு விஷேட வைத்தியர் ரேனுகா ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.