குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைக்குழுவின் இடைக்கால அறிக்கை இன்று சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்போது எவ்வாறு விசாரணையை முன்னெடுக்க வேண்டுமென்பது குறித்து இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் லால் பனாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.