நரேந்திர மோதி இன்று இரண்டாவது முறையாகவும் இந்தியப் பிரதமராக பதவியேற்கவுள்ளார். எண்ணாயிரம் பிரமுகர்கள் மத்தியில் ராஷ்டபதிபவனில் இதுதொடர்பான நிகழ்வு இடம்பெறவுள்ளது. பீம்ஸ்டெக் நாடுகளின் உறுப்பினர்களுக்கு பதவியேற்பு நிகழ்வுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பங்களதேஷ், இலங்கை, நேபாளம் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளும் இதில் உள்ளடங்குகின்றன. நரேந்திர மோதியுடன் 60 பேர் கொண்ட இந்திய அமைச்சரவையும் பதவியேற்கவுள்ளது. இதேவேளை பிரதமர் நரேந்திர மோதியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் அறிவித்துள்ளனர்.