மேற்கு பிரேஷிலுள்ள 4 சிறைச்சாலைகளில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக 57 சிறைக்கைதிகள் கொல்லப்பட்டனர். இக் கைகலப்பானது கடந்த ஞாயிற்றுக் கிழமை ஆரம்பமாகியதாக சிறைச்சாலை அதிகாரியொருவர் தெரிவித்ததுடன் இதுவரை இந்நிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான மோதலில் 15 பேர் உயிரிழந்ததுடன் நேற்றைய தினமளவில் மேலும் 42 பேர் உயிரிழந்துள்ளனர். மோதல்களுக்கான காரணங்களை பொலிசார் இதுவரை உரிய முறையில் வெளியிடவில்லை.
மோதல்கள் ஏற்பட்ட சிறைச்சாலைகளில் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரேசில் பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர். பிரேஷில் சிறைச்சாலையில் அதிகளவிலான கைதிகள் சிறை வைக்கப்படுவதினால் ஏற்படுகின்ற இட நெருக்கடியே மோதல்களுக்கான காரணங்களாக இருக்க கூடுமென அறிவிக்கப்படுகின்றது.