சேனா படைப்புழுவினால் சேதமடைந்த ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 79 சோளச் செய்கையாளர்களுக்கு நஷ்டயீடு வழங்கப்பட்டது.
ஹம்பாந்தோட்டை மாவட்ட இணைப்புக்குழு கூட்டத்தில் ராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆராய்ச்சி தலைமையில் நஷ்டயீட்டு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன. 20 இலட்சத்துக்கும் கூடுதலான நிதி விவசாயிகளுக்கென நஷ்டஈடாக வழங்கப்பட்டது.
சேனா படைப்புழு தாக்கத்தினால் பயிர்நிலங்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு பல கட்டங்களின் கீழ் நஷ்ட ஈடுகள் வழங்கப்பட்டன.