வெலிமடை – திமுத்துகம பிரதேசத்தில் ஒரு தொகை தேசிய அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றை வைத்திருந்த நபரும் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 51 தேசிய அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலை முன்னெடுத்து வந்த குறித்த நபர் வட்டிப்பணத்தை செலுத்தாதவர்களிடமிருந்து அடையாள அட்டைகளை பெற்றுக்கொண்டதாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் வெலிமடை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.