கடற்பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. விசேட தேடுதல் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் படகொன்று லக்ஷத் தீவுப் பகுதிக்கு சென்றுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதென இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டது.
இதனையடுத்து விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்களை இந்திய கடற்படையும் ஆரம்பித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் இசுறு சூரிய பண்டார தெரிவித்தார்.