192வது மாதிரிக் கிராமம் இன்றைய தினம் மக்கள் உரிமைக்கு வழங்கப்படவுள்ளது. ஹம்பாந்தோட்டை கீழ் மத்தல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த கிராமத்திற்கு ஏத்ரஜகம என பெயரிடப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கிராமத்தில் 68 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாகர பலன்சூரிய தெரிவித்துள்ளார்.