தேசிய மொழி வாரம் ஜுலை மாதம் முதலாம் திகதியிலிருந்து ஆரம்பமாகவுள்ளது. இன்றைய தினத்திலிருந்து மொழி வாரத்தை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை கருத்திற்கொண்டு அதனை பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தேசிய மொழி வாரத்தை ஜுலை முதல் வாரத்தில் ஆரம்பிப்பதற்கு அனுமதியை பெறுவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார். சிங்கள, தமிழ் என்பன இலங்கையின் அரச கரும மொழிகளாகும். ஆங்கிலம் தொடர்பாடல் மொழியாக கண்ணோக்கப்படுகிறது. குறித்த மூன்று மொழிகளையும் தவிர வேறு எந்த மொழிகளும் அரச மொழிகளாக அங்கீகரிக்கப்படவில்லையென அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.