பல பில்லியன் பெறுமதியான ஆயுதங்களை சவுதி அரேபியாவிற்கு விற்பனை செய்ய அமெரிக்கா இணக்கம் வெளியிட்டுள்ளது. இதற்கான பிரேரணைக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அனுமதி வழங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தன்னிடமுள்ள மேலதிக அதிகாரத்தை பயன்படுத்தி, காங்கிரசை தவிர்த்துவிட்டு சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஆயுத விற்பனை ஒப்பந்தத்தை ட்ரம்ப் முன்னெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஈரானிற்கும் அமெரிக்காவிற்குமிடையில் ஏற்ப்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக, சவுதி அரேபியாவுடன் ஆயுத ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இதேவேளை அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்கள் கொள்வனவு செய்வதன் ஊடாக, வலய நாடுகளின் எதிர்ப்பை சவுதி அரேபியா சந்திக்க நேரிடுமென அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர