ஒரே குடும்பத்தினைச்சேர்ந்த இரு சகோதரிகள் அநுராதபுரம்-மகவிலச்சிய-எலபத்கம பகுதியிலுள்ள கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டனர்.குறித்த இரு சகோதரிகளையும் காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடொன்றும் செய்யப்பட்டிருந்தது.சடலமாக மீட்கப்பட்ட சகோதரிகள் அவர்களது வீட்டக்கருகாமையிலுள்ள கியறொன்றிலிருந்தே மீட்கப்பட்டுள்ளனர்.22 மற்றும் 26 வயதுடைய சடலமாக மீட்கப்பட்ட குறித்த சகோதரிகளின் மரணம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.