சட்டவிரோத மணல் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென கடற்படையினர் தெரிவித்துள்ளனர். நாட்டின் பல பகுதிகளிலும் திடீர் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்தார். சட்டவிரோத மணல் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் தொடர்பில் கடற்படையினர் விசேட அவதானம் செலுத்தியுள்ளனர். குற்றச்செயலில் ஈடுபடுவோர் தராதரம் பார்க்காது தண்டிக்கப்படுவர். இதுவரை கைப்பற்றப்பட்டுள்ள 30 ஆயிரம் கியூப் மணல் அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்தார்.