ஈரானிடமிருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதை முழுமையாக நிறுத்தியுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இதனால் ஈரானுடனான எண்ணெய் வர்த்தக தொடர்புகளை துண்டித்துள்ளதாக அமெரிக்காவுக்கான இந்திய தூதுவர் குறிப்பிட்டுள்ளார். தனது நட்பு நாடுகள் ஈரானுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடக்கூடாதென அமெரிக்கா தடை விதித்தது. அதை ஏற்றுக்கொள்ளும் விதத்திலேயே இந்தியா தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதேவேளை அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்க முடியாதென சீனா, ஜப்பான் உட்பட மேலும் பல நாடுகள் அறிவித்துள்ளன.