அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்குமிடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளது. அடுத்த மாதம் ஜப்பானில் G-20 நாடுகளின் மாநாடு நடைபெறவுள்ளது. குறித்த சந்தர்ப்பத்தில் அமெரிக்க – இந்திய தலைவர்கள் சந்திக்கவுள்ளனர். இதை வெள்ளை மாளிகையும் உறுதிசெய்துள்ளது. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையில் முத்தரப்பு பேச்சுவார்த்தையும் நடைபெறவுள்ளது. அதில் மூன்று நாடுகளின் தலைவர்களும் சந்திக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.