அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களே முன்வைக்கப்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர், இராஜாங்க அமைச்சர் எச்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார். ரிஷாட் பதூர்தீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்படும். இதுதொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தெளிவாக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் எச்.எம்.ஹரீஸ் குறிப்பிட்டுள்ளார். இனவாத அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களே அமைச்சர் ரிஷாட் பதூர்தீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.ஹரீஸ் குறிப்பிட்டுள்ளார்.