தனியார் பஸ் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று காலை இரத்னபுரியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பஸ் வண்டி அவிசாவளை- உக்வத்த பகுதியில் வைத்து தீ விபத்தில் சிக்கியது.
குறித்த தீ விபத்தினால் எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை.மின் கசிவே இந்த தீ விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிசார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.